இயங்காத மனம் சாத்தானின் கூடாரம் என்றார்கள்;
நாங்கள் எங்களை அர்ப்பணித்தோம்:
“எங்கள் வாழ்க்கை இந்த பூமியின் நலனுக்காகவே,’ என!
“பூமியின் நலனை வரையறுப்பது யார்?”
நாங்கள் எங்களை அர்ப்பணித்தோம்:
“எங்கள் வாழ்க்கை இந்த பூமியின் நலனுக்காகவே,’ என!
“பூமியின் நலனை வரையறுப்பது யார்?”
இயக்கங்களை இலகுவாக்க இயத்திரங்கள் பல கண்டனர்;
நாங்கள் பிரமிப்படைந்தோம்:
“நேரத்தை மிச்சமாக்கும் அற்புதமான கண்டுபிடிப்புகள்!” என!
“யாருக்காக, யாருடைய நேரம் மிச்சமாகியது?”
வேலைவாய்ப்புகள் பல உருவாக்கினார்கள்;
அவற்றில் வியந்து மூழ்கினோம்:
உண்டு உறங்க மட்டுமே வீடு என!,
“இயந்திர சமூகத்தில் ஒன்றென ஆக்கப்பட்டோமா?”
விடையில்லா இக்கேள்விகளைத் தூக்கி சுமக்கிறோம்,
இடையில்லா வேலைப்பளுவின் நடுவே:
மனங்களைத் துறந்து, ஆன்மாவை ஒளித்து,, உணர்விழந்து,
சாத்தானின் கூடாரத்திலே வாசம் செய்கிறோம்-,
இருத்தல் மட்டுமே வாழ்வென நம்பி!
No comments:
Post a Comment