ஒரு அழகான ஞாயிறு மதியம்
அவர்கள் ஐவராய்க் கடற்கரைக்கு வந்தார்கள்:
அவர்கள் ஐவராய்க் கடற்கரைக்கு வந்தார்கள்:
முதலாமாவனுக்குச் சிப்பிகளின் மீது காதல்:
கடற்கரை மணலைத் தோண்டி, கிளறி,
அழகழகான, வழுவழுப்பான, நிறம்நிறமான
சிப்பிகளைத் தேடிப் பொறுக்கினான்.
கடற்கரை மணலைத் தோண்டி, கிளறி,
அழகழகான, வழுவழுப்பான, நிறம்நிறமான
சிப்பிகளைத் தேடிப் பொறுக்கினான்.
இரண்டாமவனுக்கு அலைகளின் ஆர்ப்பரிப்பு மிகவும் விருப்பம்:
கரையில் நின்று அவை எழும்புவதும், அடங்குவதுமான
அழகை ரசித்து, அவைகளைத் துரத்திப் பிடித்து,
அவைகளின் ஓயாத உழைப்பை சிலாகித்தான்.
கரையில் நின்று அவை எழும்புவதும், அடங்குவதுமான
அழகை ரசித்து, அவைகளைத் துரத்திப் பிடித்து,
அவைகளின் ஓயாத உழைப்பை சிலாகித்தான்.
மூன்றாமவனுக்கு ஆழ்கடலின் அமைதியில் நாட்டம்:
கடலும் வானமும் சங்கமிக்கும் பேரழகுக் காட்சியும்,
கடல் தன்னுள் வியாபித்துள்ள உயிர்களையும்,
அவைகளின் திறந்த, பரந்த பக்குவத்தையும் மெச்சினான்.
கடலும் வானமும் சங்கமிக்கும் பேரழகுக் காட்சியும்,
கடல் தன்னுள் வியாபித்துள்ள உயிர்களையும்,
அவைகளின் திறந்த, பரந்த பக்குவத்தையும் மெச்சினான்.
நான்காமவனுக்குக் கடலை சுற்றியுள்ள வியாபாரம் மீது ஆச்சரியம்:
சுண்டல், மீன் வறுவல், அப்பளம், பஞ்சுமிட்டாய், பொம்மை விற்போர்;
மீன் பிடிப்போர், வலைப் பின்னுவோர், கடற்கரை மகிழ்விளையாட்டு என
ஓரு கடலையும், அதன் பேரலையையும், சுற்றி எவ்வளவு வாழ்வாதாரம்?
சுண்டல், மீன் வறுவல், அப்பளம், பஞ்சுமிட்டாய், பொம்மை விற்போர்;
மீன் பிடிப்போர், வலைப் பின்னுவோர், கடற்கரை மகிழ்விளையாட்டு என
ஓரு கடலையும், அதன் பேரலையையும், சுற்றி எவ்வளவு வாழ்வாதாரம்?
ஐந்தாமவனுக்கோ வந்திலிருந்துத் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை:
கடலின் கொந்தளிப்பு, அலைகளின் பேரிரைச்சல்,
ஒயாத வெயில், சுற்றியுள்ள மக்களின் கூச்சல் என
அருவருப்பைத் தூண்ட, கைகடிகாரத்தைத் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.
கடலின் கொந்தளிப்பு, அலைகளின் பேரிரைச்சல்,
ஒயாத வெயில், சுற்றியுள்ள மக்களின் கூச்சல் என
அருவருப்பைத் தூண்ட, கைகடிகாரத்தைத் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரே கடலில்,
ஒவ்வொருவரும் தாங்கள் தேடியதையே கண்டார்கள்-
எனில், அவர்கள் அக்கடலை தங்கள் கோணங்களுக்குள் அடக்கினார்கள்,
தனியொரு மனிதனைப் பற்றிய நம் தீர்ப்புகளைப் போல்!
கடல் என்ற பரந்த வெளியை அடக்க முடியுமோ?!
மனிதர்களைப் பற்றிய நம் தீர்ப்புகளும் தீர்வுகள் ஆகுமோ?!
-Dec 15,2021
ஒவ்வொருவரும் தாங்கள் தேடியதையே கண்டார்கள்-
எனில், அவர்கள் அக்கடலை தங்கள் கோணங்களுக்குள் அடக்கினார்கள்,
தனியொரு மனிதனைப் பற்றிய நம் தீர்ப்புகளைப் போல்!
கடல் என்ற பரந்த வெளியை அடக்க முடியுமோ?!
மனிதர்களைப் பற்றிய நம் தீர்ப்புகளும் தீர்வுகள் ஆகுமோ?!
-Dec 15,2021