Tuesday, December 24, 2024

சீனிச்சேவு- கற்றல்கள்

 . வின் வழக்கம் போல எளிய மனிதர்களின் அறமும், அன்பும் நிறைந்த கதை. . விற்கு இது முருகன் காலம் போலும். வரிசையாக முருகனைக் கடைகிறார். 


இந்த கதையின் நாயகன் என்னவோ முருகன் தான், ஆனால், அம்மா தான் வீரியம். ‘ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவதுஎன்ற போக்கும், தன்னை அடக்க முற்பட்ட மகனை, “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.”  அப்பாவை ஆண்டதும், அப்பா தன்னை ஆண்டுகொண்டதைப் பொறுத்துக் கொண்டதற்காக அவள் கொண்ட நியாயமும், கொண்ட உறுதியும் என பெண்ணியமும், பெண் சுதந்திரமும் போகிற போக்கில் வீரியமான அம்மாவின் மூலம் மின்னுகிறது


 அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது என்ற ஒற்றை வரி போதும். அம்மா ஆக்ரோஷமானவள் அல்ல, ஆனால் ஆண்டாள் - கணவனை, மகள்களை, பெற்ற மகனை, ஏற்றுக் கொண்ட மகனை! என்னுடைய அங்குசம் என்ன என்பதை ஒரு நொடி நினைத்துப் பார்க்கவும் செய்தேன். 


அவளும் கடவுளே! அவளைக் கடக்க இயலாமல் தான் முருகனின் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன-உள்ளே இல்லாத அமைதியைத் தாங்கவியலாமல்! அமைதி எனும் வெளிச்சத்தை நோக்கி செல்லுதலை, “வெளிச்சத்தை நோக்கி நீதாம்லே நெருங்கி போகணும். ஒருநாள்ள சாகிற விட்டில் பூச்சிக்குக்கூட இந்த உண்மை தெரிஞ்சிருக்கு. மனுஷனுக்குப் புரியலையா? விலகி விலகி போயிட்டு இருட்டா இருக்குன்னு புலம்புனீன்னா எப்படி?” என்று கடத்தி விடுகிறார்.


“படிப்புங்கறதே இந்த வாழ்க்கையை வாழக் கத்துக்கிறதுதான். வாழ்றதுக்குத்தான் எல்லாமும். பொருளீட்டறதுக்கு முன்னாடி எந்த ஞாய தர்மத்துக்கும் இடமே இல்லைதான். பொருளில்லாதவங்களுக்கு இந்த பூமி இல்லைங்கறதை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிவச்சிட்டு போயிட்டார். அதுக்காக பொருள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை பார்த்துக்கோ. அது உனக்கு ஒருநாள் புரியவும் செய்யும். என்னைக்காச்சும் தோணறப்ப வந்து பாரு”


அதெப்படி ரேஷனரிசிச் சோற்றைப் போல வெந்து சாகிற தன்னிடம் அனுமதி கேட்காமல் அம்மா அதைச் செய்தாள் என்று அப்போதுமே நினைத்தான்.

 “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.” என்றாள் தீர்மானமாய்.

ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது

நாய் நரி பறவைன்னு எல்லா உசுருமே தான் சோத்துக்கு தானேதானே உழைக்குது? நான் மட்டும் என்ன செறப்பு? இனியாச்சும் எவர் கையையும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறேன்.

 அம்மா இல்லாத நேரங்களில் மட்டும் போய் சாமி படத்திற்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு வருவான். அந்தப் பணம் எடுக்கப்படாமலேயே குவிந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆனால் தன் கடமையில் இருந்து வழுவிவிடாத செயலைத் தவறாமல் மேற்கொண்டான். அப்போது அப்பாவைத் தன்னுள் இருத்தி நினைத்தும் கொண்டான்.

அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது.

No comments:

Post a Comment