புவியால் கைவிடப்பட்டு,
மேகங்களாலும் நிராகரிக்கப்பட்டு,
ஒரு இலையேனும் சொந்தம் கொள்ளாது,
காற்றில் தத்தளிக்கும் நீர்த்துளி நான்!
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்:
மலையெனக் கனக்கும் கானல் நீரைச் சுமந்தபடியே,
மேகத்தையும் தரையையும் இணைக்கும் இழையைத் தேடி!
நைந்த என் ஏக்கத்தைத் தைக்கும் சிறு நூலாவது கிட்டுமா?
மேகங்களாலும் நிராகரிக்கப்பட்டு,
ஒரு இலையேனும் சொந்தம் கொள்ளாது,
காற்றில் தத்தளிக்கும் நீர்த்துளி நான்!
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்:
மலையெனக் கனக்கும் கானல் நீரைச் சுமந்தபடியே,
மேகத்தையும் தரையையும் இணைக்கும் இழையைத் தேடி!
நைந்த என் ஏக்கத்தைத் தைக்கும் சிறு நூலாவது கிட்டுமா?
No comments:
Post a Comment