Wednesday, March 13, 2024

சுதந்திரம்- தமிழ்மொழி

வா வா என்ற என்னுடைய குழந்தை அழைப்பில் 

மழலையாய் வந்தாய்

அம்மாவிலிருந்து ஆசான் வரை உறவுகள் தந்தாய்

பாடமாய் மதிப்பெண்களாய் பாரமானாய்,

பழுவாய் இழுத்து வந்து உன்னைப் பழிக்கையில்

நீ கூறிய கதைகளால் இரக்கம் பெற்றாய்:

மெல்ல என் காதலியானாய்:

மெய் உணர்த்தி, உயிரூட்டி

உயிரும் மெய்யுமாய்,

மெய்யும் உயிருமாய்!

கிறக்கத்தில்,

உன்னை முற்றிலும் அறிய முற்பட்டேன்:

நீயோ, முதலும் முடிவும் இல்லாது,

ஏலேமுதல்ஏனுங்கவரை,

சமணம் முதல் கணினி வரை,

அனைத்துக்கும் முகவரியாய் இருக்கிறாய்!

சட்டங்களுக்குள் ஒளித்து 

வைக்க முயல்பவர்களுக்குப்

பழிப்புக் காட்டி

என் சுதந்திரமானாய்!

No comments:

Post a Comment